தேர்தல்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முதல் முறையாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான மூப்பனாரின் வேண்டுகோளை ஏற்று 1999 நாடாளுமன்ற தேர்தலில் ஜி. கே. மூப்பனார் தலைமையிலான தமாகா கூட்டணியில் விசிகவிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.


அதில் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும்(225768 வாக்குகள்) 31.17% வாக்குகளும் பெரம்பலூர் தொகுதியில் தடா பெரியசாமி(85209 வாக்குகள்) 12.2% வாக்குகள் பெற்று தோல்வியடைந்தனர்.




அதன் பிறகு 2001 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான தேஜகூட்டணியில் இடம் பெற்றார்.
மேலும் இத்தேர்தலில் அன்றைய முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று திமுகவின் அதிகார பூர்வமான உதய சூரியன் சின்னத்தில் 8 தொகுதியில் போட்டியிட்டு 
கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் தொகுதியில் மட்டுமே (1,35,016 வாக்குகள் பெற்று ) வெற்றி பெற்று திருமாவளவன் தனது விசிக கட்சியின் சார்பில் முதல் முறையாக தமிழக சட்டமன்றத்திற்குச் சென்றார்.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அவர்கள் உருவாக்கியிருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான மக்கள் கூட்டணியில் அக்கட்சியின் அம்பு சின்னத்தில் போட்டியிட்டு திருமாவளவன் உட்பட அனைவரும் தோல்வியடைந்தனர்.




 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அன்றைய முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் அதிமுக தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியில் 
விசிகவிற்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டு 
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவில்  9 தொகுதிகளில் போட்டியிட்டு அதில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுமீண்டும் மங்களூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை(1,42,353 வாக்குகள்), காட்டுமன்னார்கோயில் தொகுதியில் து. இரவிக்குமார் அவர்கள் (1,11,245 வாக்குகள் ) பெற்று ஆகியோர்  சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகினார்.







2009 நாடாளுமன்ற தேர்தலில் அப்போது அதிமுக கூட்டணியில் எதிர்கட்சி தலைவி ஜெயலலிதா உடன் இணைந்து கொண்டு இலங்கையில் நடந்தேறிய ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த இந்தியாவில் அப்போது நடந்து கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியையும் அதற்கு ஆதரவாக இருந்த திமுக முதல்வர் கருணாநிதி ஆட்சியையும் கடுமையாக எதிர்த்த திருமாவளவன் அப்போது அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததால்  எதிரணியில் திமுக–காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்தது அவரது அரசியலில் முதல் சறுக்கல் என்று விமர்சிக்கப்பட்டது.
 அதன் பிறகு அவருக்கு சிதம்பரம், விழுப்புரம் இரண்டு மக்களவைத் தொகுதி வழங்கபட்டு அதில் திருமாவளவன் மட்டுமே சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு
(4,28,804வாக்குகள் )வெற்றி பெற்று முதல் முறையாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வாகினார்.

2011 சட்டமன்ற தேர்தலில் திமுக–காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்த விசிக திருமாவளவனுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், அத்தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவும் இணைந்ததாலும் அப்போது நடந்து கொண்டிருந்த திமுக ஆட்சியில் முதல்வர் மு. கருணாநிதி மீதான எதிர்ப்பலையால் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விசிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தனர்.
2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விசிக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு திருமாவளவன் உட்பட திமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் தோல்வியடைந்தனர்.
2016 சட்டமன்ற தேர்தலில் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி திருமாவளவன் ஆதரவு பிரச்சாரம் செய்த போது விசிக சார்பில் 25 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட அக்கூட்டணி கட்சி தலைவர்கள் வெற்றி பெறவில்லை.




பின்னர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக–காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விசிகவிற்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மேலும் சிதம்பரம் (தனி) தொகுதியில் தொல். திருமாவளவன் 4.6 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிகவிற்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது
2024 நாடாளு மன்றத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2024நாடாளுமன்ற தேர்தலில் திமுக–காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விசிகவிற்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மேலும் சிதம்பரம் (தனி) தொகுதியில் தொல். திருமாவளவன் 4.6 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.